"பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்" - பிரதமர் மோடி

0 1041

பேரிடர் காலங்களில் தனித்து அல்லாமல், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர், நெருக்கமான உலகில் ஒரு பிராந்தியத்தில் நேரிடும் பேரழிவு, மற்றொரு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

எனவே, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிடும் வகையில், உள்கட்டமைப்புகள் அமைய வேண்டுமென வலியுறுத்திய பிரதமர், போக்குவரத்து உள்கட்டமைப்பைப் போலவே, சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பும் முக்கியமானது என்றார்.

ஐரோப்பா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை, துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய நிலநடுக்கம் என சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவுகள், உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments